Sunday, August 4, 2013

சதுரகிரியில் சித்தர்களை நேரில் தரிசிக்க.... - Just Relax and Read

சதுரகிரி மலைச் சாரலில், சுனையருவிக்கு அருகில் உள்ள புனல்வாய் அருவிப் பக்கமாய் கோரக்கர் குண்டா என்றொரு பாறை இருக்கிறது.அந்த பாறைக்கு வந்து தான் சொல்லியுள்ள மந்திரத்தை நாற்பத்தி ஐந்து நாள் கண்மூடி இருந்து செபித்து வந்தால் சித்தர்களை தரிசிக்கலாம் என்கிறார் கோரக்கர்.

தொடர்ந்து நாற்பத்தி ஐந்து நாள் மந்திரத்தை செபிக்க மந்திரம் சித்திக்குமாம். மந்திரம் சித்தியடைந்ததும் குகையில் இருக்கும் சித்தர்கள் காட்சி தந்து "ஊமை" என்று அழைக்கப்படும் சங்கு மையத்தை விழிப்படைய செய்து குரு உபதேசமும் செய்வார்கள் என்கிறார். பின்னர் ஆமை எழுத்தை பீடமாக கொண்ட ஆதாரத்தை நாடும் வழிமுறைகளையும் சொல்லி சோதி நிலைச் சொரூபமும் தருவார்களாம்.

இத்தனை சிறப்பு பொருந்திய இந்த மந்திரத்தை வார்ச்சடையை உடைய ஆத்தாள் தனக்கு சொல்லியதாகவும் அதனை தான் உலகத்தாருக்கு சொல்வதாகவும் கூறியிருக்கிறார் கோரக்கர்.

"வாச்சடை யாளத்தா ளுரைத்த மந்திரம்
வழங்கிடுவேன் வையகத்தில் வஞ்ச மின்றி
நேர்பெறவே ஓம். பசு.பரபதிபக்ஷ
நிரதிசய சித்ரூப ஞான மூர்த்தோய்
தீர்க்க நேத்ராய, கண, கம், கங், கெங், லங்
லிங், லங், லா, லீலம், ஆவ், பாவ்,ஆம்,ஊம்
பார்கவ்விய சோதிமய வரப்பிர சன்ன
பாத தரிசியே கோரக்கர் சரணாய நமஸ்து.

ஓம் பசுபரபதிபக்ஷ ராஜநிரதிசயசித்ரூப ஞானமூர்த்தாய தீர்க்கநேத்ராய கணகம்கங் கெங்லங் லிங்லங் லாலீலம் ஆவ்பாவ் ஆம்ஊம் பார்கவ்விய ஜோதிமய வரப்பிரசன்ன பாத தரிஸ்ய கோரக்க சரணாய நமஸ்து.

                                        வேறொரு தகவலோடு சந்திக்கிறேன்.